#BigBreaking : சற்றுமுன் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி சுட்டு படுகொலை.! போலீசார் பதிலுக்கு துப்பாக்கி சூடு.!
Shots fired at Rohini court premises
தலைநகர் டெல்லியில் ரோகினி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஜித்தேந்தர் கோபி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் பிரபல ரவுடியாக இருந்து வருபவர் ஜித்தேந்தர் கோபி. இவருக்கும் மற்றொரு தரப்பு ரவுடி கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஒரு வழக்கு சம்பந்தமாக டெல்லியில் ரோகினி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜிதேந்தர் கோபி வந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் வேடத்தில் வந்த ரவுடி கும்பல், ஜித்தேந்தர் கோபியை சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திலேயே சுட்டு படுகொலை செய்துள்ளது.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. மேலும் பலர் மீது காயமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது வெளியான உறுதி தகவலின்படி, ஜிதேந்தர் கோபி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் பதில் தாக்குதலில் எதிர்தரப்பு ரவுடி கும்பலை சேர்ந்த 3 பேருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்துள்ளனர்.
English Summary
Shots fired at Rohini court premises