வேறு கட்சியில் இணைய போகும் திமுக எம்எல்ஏ.? அதிர்ச்சியில் திமுகவினர்.!!
senthil balaji may be join rajini party
கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் நன்கு பாராட்டப்பட்ட அமைச்சராக இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல் பிரச்சனைகளால் டிடிவி தினகரன் ஆதரவாளராக உருவெடுத்தார். தற்போது அ.ம.மு.க.வின் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்துள்ளார். டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தரப்பு தயாரானது. இதில் செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். மேலும், சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். திமுகவில் இணைந்து மீண்டும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், சட்டசபையில் பேசிய செந்தில்பாலாஜி, அதிமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுகவில் செந்தில்பாலாஜி இருந்த போது, உடலும் உயிரும் உயிரும் அதிமுகவிற்காக இருக்கும் என்று பேசியிருந்தார். அதன்பிறகு டிடிவிதினகரன் பக்கம் சென்றபோது அதே வசனத்தை பேசினார்.
தற்போது முக ஸ்டாலின் பக்கம் சென்று மீண்டும் அதிக வசனத்தை பேசி இருக்கிறார். எதிர்காலத்தில் அவர் ரஜினி கட்சியில் இணைந்தாலும் தன் உடலும் உயிரும் உள்ளவரை ரஜினிக்கு ஆதரவு என செந்தில்பாலாஜி கூறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
English Summary
senthil balaji may be join rajini party