பாண்டிய மன்னன் செய்த ஒன்றை செய்த எடப்பாடி.!! குவியும் பாராட்டு.!!
sellur says about edappadi
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை காக்க பாண்டிய மன்னனை போல் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமி எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பல்வேறு வகையான குடிமராமத்துப் பணிகளைத் துவங்கி வைத்தார். அதன் பின்னர் அந்த விழாவில் பேசிய செல்லூர் ராஜு, " முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாநகரின் தொன்மையைக் காப்பாற்றி, அதன் வரலாற்றுப் பெருமைகளைப் போற்றத்தக்க வகையில் செயல்பட்டு வருகிறார். மதுரை மண்ணிற்கு அவர் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்.
மதுரையைக் காக்க பாண்டிய மன்னன் எப்படி எல்லாம் நடவடிக்கை மேற்கொண்டாரோ, அதேபோலவே நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நடவடிக்கை பல எடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மதுரை மக்கள் நன்றி செலுத்த வேண்டும். உங்கள் மூலம், நான் அந்த நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நீராதாரங்கள் கடந்த கால ஆட்சியின் காரணமாக வற்றிவிட்டது. இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் குடி மராமத்துப் பணிகள், ஏரி, குளங்களைத் தூர்வாரும் பணிகள் ஆகியவை இந்த ஆட்சியில் நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
sellur says about edappadi