எஸ்பிபி குறித்து கேள்விக்கு செல்லூர் ராஜு செய்த காரியம்.! செய்தியாளர்களுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய உடன் அதற்கு செல்லூர் ராஜூ, "எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதல்வர் ஏற்கனவே தனது இரங்கலை தெரிவித்து இருப்பார். நானும் தற்போது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீது அதீத அன்பு கொண்டவர். 

எதிர்க்கட்சியில் இறந்தபோது கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என தெரிவித்து இருந்தார்." என்று பேசிக்கொண்டே சென்றார். 

இதைக் கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்து எஸ்பிபி குறித்து கேட்டால், இவர் எஸ்ஆர் பாலசுப்பிரமணியம் குறித்து பேசுகிறாரே என்று கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இதனை கண்ட அமைச்சர் பின்னர் சுதாரித்துக் கொண்டு நீங்கள் பாடகர் பாலசுப்பிரமணியம் குறித்து கேட்கிறீர்களா? நான் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்ஆர் பாலசுப்ரமணியம் குறித்து கேட்கிறீர்கள் என்று நினைத்தேன். என்று கூறிவிட்டு அவர் சிறந்த பாடகர், லட்சக் கணக்கானோரின் இதயத்தை தனது இனிய குரலால் கட்டிப்போட்டவர். அவருடைய மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது." என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju speech about spb


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->