திமுகவின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக அமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பறவை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். நிவாரண பொருட்களை வழங்கிய பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. அதிமுகவில் உழைப்பவர்களுக்கு பதவி தேடிவரும். 

திமுகவில் குடும்ப அரசியல்தான் நடைபெற்று வருகிறது. கலைஞருக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் நாடினால் தான் தற்போது திமுகவில் பதவி பதவி கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், திமுகவினர் உதயநிதி பின்னால் சுற்றி வருகின்றனர்.

அதிமுகவை ஒழிக்க திமுக பல வேலைகளை செய்தது. என் மீதும் திமுக ஆட்சியில் பல பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். ஜெயில் எங்களுக்காக தான் கட்டப்பட்டது. எங்களுக்கு ஜெயில் குறித்த பயம் இல்லை. அதையடுத்து, கட்சி பணிகளில் தீவிரம் காட்டினேன் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். 

2011 ஆண்டு நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகதான். தற்போது நீட் தேர்வு குறித்த குறைகளை திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். காவேரி, இலங்கை தமிழர் உள்ளிட்ட தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju says about dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->