மீண்டும் முருகனை கையில் எடுத்த சீமான்.! இந்த முறை என்ன கூறினார் பாருங்கள்.!
seeman speech about muppattan murugan
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு நாள் குறித்து பேசினார். தொடர்ந்து, "பலரும் நமது முப்பாட்டன் முருகன் என்று பேசிய பொழுது என்னை இழிவு படுத்தினார்கள். எனக்கு ஆதரவாக அப்போது யாருமே வரவில்லை.
முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது ஆதரவாக எனக்கு யாரும் இருக்கவில்லை. தற்போது பாஜகவுக்கு அரசியலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, பல்வேறு பிரச்சினைகளை மறைக்க வேல் யாத்திரை செல்கிறது.
பாஜக மக்கள் பிரச்சனையை பாஜக நின்று சரி செய்யாது. ஏனெனில், பாஜகவால் தான் பிரச்சனையே ஆரம்பமாகும். வேலை எடுத்து கொண்டு செய்யும் அரசியல் செய்துவருகிறது பாஜக நிச்சயம் வெற்றிபெறாது.
அதே அரசியல் களத்தில் வேலை வைத்து பாஜகவை நாங்கள் வீழ்த்துவோம். என்ன தான் பாஜக அரோகரா போட்டாலும் கூட முருகன் என்றாலே சீமான் முகம் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்." என்று கூறினார்.
English Summary
seeman speech about muppattan murugan