நாங்கள் தனித்தே போட்டி! முடிவை அறிவித்த தலைவர்! பகிரங்க பேட்டி!
seeman press meet about 2021 election
தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு, மே மாதம் நடைபெற்றவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது முதலே தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் நிர்வாகிகளை முழுவீச்சு களப்பணியில் இறக்கி விட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. வேறு சில காட்சிகளையும் தங்களுடன் இணைக்க ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் அதிமுகவின் கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், புதிய தமிழகம் மற்றும் பல சிறிய கட்சிகள் இடம்பெற்று இருந்தது. திமுக கூட்டணியை பொறுத்த வரையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்னியூஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்தது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி உள்ள கட்சிகள் அதே கூட்டணியில் தொடருமா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு திமுக பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அதிமுக, திமுக இரண்டு அணிகளுக்கு மாற்றாக புதிதாக பாஜக தலைமையில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சீமான் அளித்துள்ள அந்த அந்த பேட்டியில், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 234 தொகுதிகளுக்கும் உண்டான வேட்பாளர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் அந்த பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
English Summary
seeman press meet about 2021 election