ரஜினிகாந்த் வந்துட்டார்னு வைங்க.. ஸ்டிரைட்டா போர்தான்.. ரஜினியை வம்புக்கு இழுக்கும் சீமான்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி அன்று  நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நான்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று சூலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியவை, ரஜினிகாந்த் இப்போ அரசியலுக்கு வந்துட்டார்னு வைங்க. ஸ்டிரைட்டா போர்தான்.. அவரிடம் ஒரே கேள்விதான்.. தமிழன் மண்ணில் மராட்டியனுக்கு என்ன வேலை? 

இந்த கேள்வி மட்டுமல்ல, நான் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் ரஜினி பதில் சொல்லி தப்பிக்க இயலாது. அதுவும் பொது விவாதத்துக்கு அனைவரையும் கூப்பிடுன்னு சொல்லிடுவேன். நேருக்கு நேர் சண்டை வந்துடும் ஆட்டம் காலியாயிடும். அந்த நாளுக்காக ஐ ஆம் வெயிட்டிங்.

மேலும், 8 வழிச்சாலை குறித்து அவர் கூறியவை, 8 வழிச்சாலை, ஏன்டா.. ரோடு போட்டா நாடு வளர்ச்சி பெரும் என்று எந்த முட்டாப்பய சொல்லிக் கொடுத்தது? நீ யாருக்காக ரோடு போடுறேன்னு எனக்கு தெரியாதா? அன்றும் 8 வழிச்சாலைக்கு நாங்க போராட்டம் செஞ்சப்போ, உன்னால சாலை போடவே முடியாது ராஜா. நான் செத்தாதான் அது முடியும் என்றார் மேலும், விவசாயம் என்பது தொழில் இல்லை, அது நம் வாழ்வியல் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman election campaign in sulur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->