40 வருசமா ஓசி சவாரி... ஒரு தேசிய கட்சி என்றும் பாராமல்... கிழித்து தொங்க விட்ட சீமான்..!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் நாம் தமிழரை விட  குறைவாகவே வாக்குகளை பெறுவர் என்று அந்த கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். 

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி  ஓரளவுக்கு சுமாரான வெற்றியை தான் பதித்தது. ஆனால், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்றியத்தில் ஒரு இடம் மட்டுமே வெற்றி என்றாலும் நாம் தமிழர் பின்தங்கி விட போவதில்லை. கடந்த முறை 4 சதவீதமாக இருந்த வாக்குகள் இந்த முறை 10 சதவீதமாக உயர்த்து தான் இருக்கிறது. 
 
இதை தொடர்ந்து, தற்போது பேட்டியளித்த சீமான், நடந்து முடிந்த இந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. 

மேலும், நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் தான் போட்டியிட முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெரிவித்திருந்தார். நாங்களாவது தேர்தலில் தனித்து நின்று சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறோம்.
 
ஆனால் காங்கிரஸ் 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்து வருகிறது. தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட குறைவாகவே பெறுவீர்கள் என்று தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman about congress


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->