கமுதி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை., பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஹபீப் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!
school teacher arrested in kundas law
இராமநாதபுரம் அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள முதுகுளத்தூர் அருகே பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஹபீப் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளின் எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகளுக்கு தொடர்பு கொள்ளும் ஹபீப், முதலில் பாடங்கள் தொடர்பாக தகவல் சொல்வது போல, பெற்றோர்கள் இருக்கிறீர்களா? என சுதாரிப்பாக கேட்டுக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.
பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் தொடர்பு கொள்ளும் காமுக ஆசிரியர் ஹபீப், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறான். இதுகுறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரிலும், ஆடியோ ஆதாரங்கள் மூலமாகவும் முதுகுளத்தூர் காவல் துறையினர் காமுக ஆசிரியர் ஹபீப்-யை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஹீபீப்பை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், தற்போது அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதிரடி நடவடியை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
school teacher arrested in kundas law