#BREAKING || தமிழகத்தை அதிரவைத்த விபத்து.! மொத்தம் 11 பேர் பலி.! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி செய்தி.!
Sattur Crackers FireCrackers FireAccident
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மன் பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.
விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்துள்ளனர். மேலும் இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் -போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பட்டாசு மேலும் வெடித்து தீ இன்னும் இருப்பதால் போலீசார் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக கடந்த வருடம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sattur Crackers FireCrackers FireAccident