சசிகலா விடுதலை; கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பட்ட கடிதம்..வெளியான பரபரப்பு தகவல்..!
sasikala write letter to karanataka Department of Prisons
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.தற்போது சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சிறைக்குச் சென்று சந்தித்து வருகின்றனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார். சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஆர்.டி.ஐ இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் இவ்வாறு விளக்கம் அளித்திருந்தது.
இதனிடையே, சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ராஜா செந்தூரப் பாண்டியன் கூறிவருகிறார், ஜனவரி 27 சட்டப்படி விடுதலை ஆவர். ஆனால், நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா இம்மாதம் இறுதியில் வெளியே வருவார் என செந்தூரப் பாண்டியன் கூறின் வந்தார்.
இந்நிலையில், தன்னை பற்றிய விவரங்களை 3ம் நபருக்கு தரக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தன்னை பற்றிய விவரங்களை 3ஆம் நபருக்கு வழங்கக் கூடாது, தான் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு இல்லாத மூன்றாவது நபர் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்களை கேட்பதால் விவரங்களை அளிக்க கூடாது என அந்த கடிதத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார். இதனால், சசிகலா விடுதலை பற்றி நரசிம்ம மூர்த்தி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
English Summary
sasikala write letter to karanataka Department of Prisons