மீண்டும் பரபரப்பில் அதிமுகவினர்.. வெளியான முக்கிய தகவல்.!!
sasikala speak with admk member
சில தினங்களாக சசிகலா அதிமுக மற்றும் அமமுக கட்சித் தொண்டர்களுடன் பேசிவருகிறார். அவர் பேசும் ஆடியோ வெளியாகிவருகிறது. இதில், கொரோனா முடிந்தவுடன் நான் அரசியலுக்கு வருகிறேன் என சசிகலா பேசியுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா பேசியுள்ளார். அப்போது, பூரண ஆறுமுகம், நான் எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதல் கட்சியில் இருக்கிறேன். தலைவரை நீக்கியது போதும், அம்மாவை சட்டமன்றத்தில் அவமானம் செய்தபோது மறியல் செய்து சிறை சென்று உள்ளேன். நீங்கள் சிறைக்கு சென்ற போது அதே மனநிலையில் தான் இருந்தேன்.
நீங்கள் வெளியே வந்ததை வரவேற்று போஸ்டர்கள் அடித்தேன். ஆனால் துரோகிகள் சேர்ந்து எங்களை வாழ விடவில்லை. இப்போதுகூட அமமுக நகர செயலாளர் வீரமணி உடன் நெருக்கமாக தான் இருக்கிறேன். என் மகன் செந்தில்குமார் அமமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறார். நீங்கள் கட்சிக்கு வரவேண்டும் கட்சியை காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு பேசிய சசிகலா, நிச்சயமாக வருவேன். கட்சியை சரி செய்து அம்மா கொண்டு போனது போல் கட்சியை கொண்டு செல்வேன். விரைவில் எல்லாரையும் சந்திக்கிறேன். கட்சியை நன்றாக கொண்டு செல்ல வேண்டும். இதனால் தான் ஆரம்பகால கட்சிக்காரர்களிடம் பேசி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sasikala speak with admk member