திமுகவை கைகாட்டிய சசிகலா.! பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வீ.கே.சசிகலா சென்றார். அப்போது, அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் வீ.கே.சசிகலா தெரிவித்துள்ளதாவது,

"புரட்சித்தலைவர் அ.தி.மு.க.வை தொடங்கிய குறிகிய காலத்திலயே மாயத்தேவர் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை மற்றும் சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இவரே கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர். 

தற்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக செல்கிறேன். அ.தி‌.மு.க. பிளவுக்கு காரணம் திமுக தான். மத்திய அரசு இல்லை.

அ.தி‌.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுகளை கடந்து நிச்சயம் அ.தி.மு.க ஒன்றிணையும். அ.தி.மு.க வெற்றி வாகை சூடும், மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்". என்று சசிகலா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala say about admk ops vs eps dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->