ஓபிஎஸ் உடன் சந்திப்பு எப்போது? அதிமுக எம்எல்ஏ.,களுடன் பேச்சு., இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த சசிகலா! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சசிகலா சுவாரசியமான பதிலை கொடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தணடனை அனுபவித்த வி.கே.சசிகலா சென்னையில் தற்போது வசித்துவருகிறார். அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த அவரின் ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை மட்டுமே தந்து வருகிறார.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா தெரிவிக்கையில், "கட்சி ஒன்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ் உடன் உங்களின் சந்திப்பு எப்பபோது? என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு சசிகலா, "ஓபிஎஸ்ஸை சந்திப்பது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று தான். அவர்களை நான் பிரித்துப் பார்க்க நினைக்கவில்லை" என்றார்.

மேலும், அதிமுக எம்எல்எல்.,க்களுடன் நீங்கள் பேசி கொண்டு இறுகிறுகிறீர்களா? என்று கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இத்தனை கேமரா முன்னாள் அதை எப்படி உங்களிடம் சொல்ல முடியும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒரு ஷாக்கையும் கொடுத்தார் சசிகலா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala say abou admk mlas and ops meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->