வாழ்த்து சொன்ன அமித்ஷா.. சசிகலா விடுதலை.? பாஜக போட்ட திட்டம்.!!
sasikala release bjp new plan
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சசிகலா சிறை சென்று இரண்டு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஆறு மாதம் சசிகலா சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை 4 ஆண்டுகள் அனுபவிக்கும் முன் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் வெளிவரவில்லை.
சசிகலா மேல் 1996 காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் எழும்பூர் நீதிமன்றத்தில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அபராத தொகை கட்டாததால், சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு வழக்குகளை பயன்படுத்தி சசிகலாவை சிறையில் வைத்திருக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சசிகலா சிறையில் விதிகளை மீறி நடந்து கொண்டதாகவும், இன்னும் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் கூறுதல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக வேண்டும். ஆனால் அபராதத் தொகையை கட்டாததால் தண்டனையை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த மாதம் சொத்துக்குவிப்பு வழக்குக்கு எதிராக க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில் சசிகலாவுக்கு நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திவாகரன் மகன் திருமணத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
English Summary
sasikala release bjp new plan