சசிகலா முன்கூட்டியே விடுதலையா?! திடீர் திருப்பத்தை உண்டாக்கிய கர்நாடக சிறைத்துறை!
sasikala not release for the reason of good manner
சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா சிறையில் நன்னடத்தை விதியின் காரணமாக விரைவில் வெளியே வருவார் என பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
அவரை விரைவாக விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தினகரன் உள்ளிட்டோர் எடுத்து வந்ததாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. சசிகலா வெளியே வந்தால் தமிழக அரசியல் சூழல் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தான விவாதங்கள் கூட நடைபெற்றது.
இந்த நிலையில் அவர் தனது தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பு வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை என கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தெரிவிக்கையில், சசிகலாவுக்கு சிறைகள் நன்னடத்தை விதிகள் பொருந்தாது எனவும், அவரை நன்னடத்தை விதிகளை கூறி விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகு அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சசிகலா வெளியே வருகிறார் வருகிறார் என்ற தமிழக அரசியல் பரபரப்பு அடங்கி விடும் என தெரிகிறது.
English Summary
sasikala not release for the reason of good manner