மீண்டும் அரசியலில் இறங்கும் சசிகலா.. வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக சசிகலா அவ்வப்போது அதிமுக தொண்டர்கள் இடையே உரையாற்றி வருவதாக பல ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களிடம் இடம் பேசி வருகிறார். இது அதிமுக தலைமையில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், திருவாரூரை சேர்ந்த கணேஷ் என்ற தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில். அதிமுக நிர்வாகிகள் பயத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பேசுவதைப் பார்த்தால், தொண்டர்களின் எழுச்சியை கண்டு பயத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. ஊரடங்கு முடிந்ததும் வந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala new audio for political entry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->