#BigBreaking || சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று.! சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!
SASIKALA MEDICAL REPORT
சொத்துகுவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன் மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வாரமாக சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியானது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை இயக்குனர் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார். தற்போது எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துமனை சசிகலா இருப்பார். கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
நேற்று சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்க விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சசிகலாவுக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர், விக்டோரியா மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சசிகலாவுக்கு தீவிர நிமோனியா பாதிப்பு காரணமாக நுரையீரல் தொற்று அதிகமாக உள்ளது. நேற்று 75 சதவீதமாக இருந்த ஆக்சிஜன் அளவு இன்று 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. பாதிப்பு காரணமாக சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.