மீண்டும் அரசியலில் இறங்கும் சசிகலா.? வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் இருந்து விடுதலையானதும் தீவிர அரசியலில் இறங்குவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் சசிகலா அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், சிறையில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலா, அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டு பலரையும் அதிர்ச்சி உள்ளாக வைத்தார். அதன் பிறகு பொது எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை சசிகலா வலியுறுத்தி நிலையில், சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் படுதோல்வியை சந்தித்தது. 

இதைத்தொடர்ந்து, சில தினங்களாக சசிகலா கட்சித் தொண்டர்களிடையே பேசிய ஆடியோ வெளியானது. இதில், கொரோனா முடிந்தவுடன் நான் அரசியலுக்கு வருகிறேன் என சசிகலா பேசியுள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அரக்கோணம் செம்பேடு கிராமத்தின் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசிய இன்னொரு ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. தொண்டர்கள் மனவருத்தத்தில் உள்ளனர். எனக்கு புரிகிறது. கொரோனா முடிந்தவுடன் தொண்டர்களை சந்திக்க வருகிறேன். நீங்கள் எதற்கும் பயப்படாதீர்கள் என ஆறுதல் சொல்லும் வகையில் சசிகலா பேசியுள்ளார். சசிகலா அரசியலுக்கு முழுக்கு போட்ட முடிவில் இருந்து மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தாக்கம் முடிந்த பிறகு சசிகலாவின் அரசியல் வருகையை எதிர் பார்க்கலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala may be return to politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->