ஜெயலலிதாவின் பிறந்தநாளில், சசிகலா போட்ட பிளான்.! வெளியான பரபரப்பு தகவல்.!
SASIKALA JJ BIRTHDAY PLAN
சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து தமிழகம் வந்துள்ள சசிகலாவால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் அதிமுகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒன்றிணைந்தால் மட்டும்தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
மேலும், அதிமுகவில் சசிகலா இல்லை என்றால் ஒரு சமுதாயத்தின் வாக்கு அதிமுகவுக்கு கிடைக்காது என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அவர் எப்போது கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ந்தேதி அன்று சசிகலா வீட்டில் இருந்தபடியே ஒரு சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அன்றைய தினம் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா தன் வீட்டில் இருந்தபடியே மரியாதை செலுத்த உள்ளார் என்றும், பின்னர் மருத்துவர்கள் அனுமதித்தால் சென்னையில் உள்ள கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மருத்துவர்கள் சொல்லும் போது தான் சசிகலா வெளியில் செல்வார் என்றும், கட்சி நிர்வாகிகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
SASIKALA JJ BIRTHDAY PLAN