சசிகலாவின் மீது புதிய வழக்கு.! ஆயுள் தண்டனையா.? ஆதரவாளர்கள் சோகம்.!
sasikala in news case
திடீரென சிறைக்குள் சசிகலாவின் ஆரம்ப காலத்தில் தோழி சந்திரலேகா சென்று வந்ததும் சசிகலா விடுதலை ஆகிவிடுவார் என்பது போன்ற தோற்றமானது உருவானது. மேலும், சுப்பிரமணியசுவாமி சசிகலாவை வெளியே கொண்டுவந்து அதிமுகவை ஒன்றாக்கும் வேலையில் இறங்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இவை அனைத்துமே பழங்கதை ஆகிவிட்டது. இதற்கு காரணம் கர்நாடகா உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை முன்னிட்டு 141 கைதிகள் முன்னதாகவே வெளியாகின. சசிகலா குறித்தும் நல்ல செய்தி ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கர்நாடக சிறைத்துறையில் இயக்குனர் நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவிற்கு பொருந்தாது. தண்டனை காலம் முழுதும் அவர் அனுபவித்த பிறகுதான் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்தபொழுது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதன் காரணமாக குறைந்தது 2 ஆண்டுகளாவது தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்பதால் சசிகலா காலம் முழுதும் சிறையில்தான் இருக்க வேண்டுமோ.? என அவரது ஆதரவாளர்கள் கலங்கி வருகின்றனர்.