அதிமுகவினருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா.. வெளியான பரபரப்பு தகவல்.!!
sasikala 4th audio release
சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் இருந்து விடுதலையானதும் தீவிர அரசியலில் இறங்குவார் என பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் சசிகலா அரசியல் பிரவேசம் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், சிறையில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலா, அரசியலில் இருந்து விலகி இருக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு பலரையும் அதிர்ச்சி உள்ளாக வைத்தார். அதிமுகவுக்கு இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சியாக ஆட்சியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், தொண்டர் ஒருவரிடம் கவலைப்படாமல் இருங்கள், நான் விரைவில் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்துவிடுவேன் என கூறியிருந்தார். அதேபோல் நேற்று முன்தினம் வெளியான ஆடியோவில், எடப்பாடி பழனிசாமி செய்த தவறுக்கு நான் என்ன செய்ய முடியும் என ராசிபுரம் அமமுக தொண்டரிடம் பேசியிருந்தார். சசிகலா சில அதிமுகவினரிடம் பேசியதாகவும், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் பேசப்பட்ட ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என கூறப்படும்.
இந்நிலையில், சசிகலா பேசிய நான்காவது ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சென்னையை சார்ந்த அதிமுக நிர்வாகி உடன் சசிகலா பேசியுள்ளார். அவருடன் சசிகலா கவலைப்படாதே நான் நிச்சயம் வருவேன், எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என கூறியுள்ளார்.
English Summary
sasikala 4th audio release