#BREAKING: சேலத்தில் துப்பாக்கி சூடு., ஒருவர் பலி.!
SALEM gun fire
சேலம் அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணனை தம்பியே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு காரணமாக கூட பிறந்த அண்ணனையே துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் சேலத்தில் அரங்கேறி உள்ளது.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே சொத்து தகராறு காரணமாக செல்வம் என்பவருக்கும் அவருடைய தம்பி சந்தோஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக இன்று காலை இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தபோது, சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரின் அண்ணன் செல்வத்தை சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்து துப்பாக்கி சூடு சம்பவம் அந்த அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.