சேலத்தில் அதிமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர்
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி சேர்ந்த வசந்தகுமார் என்பவர், அவரின் உறவினர் பெண்ணான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, சேலம் மாநகரம், கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார், இது குறித்து உடனடியாக விசாரணை செய்தனர்.

போலீசார் இந்த விசாரணையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது உறுதியானது. இதனை அடுத்து கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார் வசந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர்.

வசந்த குமாரிடம் போலீசார் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வெளியான தகவலின் படி, ஆட்டையாம்பட்டி அதிமுக இளைஞர் பாசறை கிளை செயலாளராக வசந்தகுமார் பொறுப்பு வகித்து வருவதாக தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SALEM aattayampatti admk member arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->