மொத்தமா 10 பைசா வருமா... கி.வீரமணிக்கு நக்கலாக பதிலடி கொடுத்த முக்கிய பிரமுகர்..!
s v shekar tweet to veeramani
துக்ளக் பத்திரிகை விழாவின் போது, தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக ரஜினிகாந்த் உரிய விலை கொடுப்பார் என்று கி.வீரமணி கூறி இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் என்ன 10 பைசா வருமா என்று எஸ்.வி.சேகர் நக்கலாக ட்வீட் செய்துள்ளார். துக்ளக் விழாவில் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு திராவிடர் கழகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், பெரியார் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கிடையாது... அனைவரும் விமர்சிக்கலாம் ஆனால் அதற்கு உண்மையான விவரத்தை வைத்து விமர்சிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதை தொடர்ந்து, தி.க தலைவர் கி.வீரமணி ரஜினியை விமர்சித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற விதத்தில் பா.ஜ.க-வின் எஸ்.வி.சேகர் நக்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈவெரா பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் - கி.வீரமணி. என்ன மொத்தமா 10 பைசா வருமா⁉️இந்துக்கடவுள்களையும் சடங்குகளும் பற்றி அவதூறாக பேசிவரும் நீங்கள் கொடுக்கப்போகும் விலை உங்க டிரஸ்டுல இருப்பதை விட மிக அதிகமாக இருக்கப்போகிறது. மணி போனா பாக்கி பூஜ்யம், என்று குறிப்பிட்டிருந்தார்.
English Summary
s v shekar tweet to veeramani