திமுக போட்ட பிச்சையில் தான் நாங்கள் நீதிபதி ஆனோமா.? நீதிபதி ஆவேசம்.! சிக்கிய ஆர்எஸ் பாரதி.! கப்-சிப் திருமா.! - Seithipunal
Seithipunal


தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில், நாங்கள் உங்களுக்கு போட்ட பிச்சை என்று திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவர் கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி போலீசாரால் கைதும் செய்யப்பட்டார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ் பாரதி, தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று தலித் மக்களை அவமானம் செய்யும் விதமாக பேசினார்.

இதனையடுத்து அவர் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக உள்ளது. எனவே அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

(குறிப்பு: தலித் மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு என்று மார்தட்டும் விடுதலை சிறுத்தைகளை கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால், தோழமை சுட்டுதலுடன் நிறுத்தி கொண்டு கூட்டணி தர்மத்தை காப்பாற்றியது. காப்பாற்றியும் வருகிறது.)

இதனையடுத்து, கடந்த வருடம் மே 23 ஆம் தேதி ஆர்.எஸ்.பாரதி எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார். இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "ஆர் எஸ் பாரதி பேச்சில் திராவிட இயக்கத்தின் சிறப்புகளையும் இயக்கத்தின் பலனாய் கிடைத்த வெற்றியும் பட்டியலிட அவ்வாறு பேசினார். நீதிபதிகள் குறித்து மட்டுமல்லாமல் மற்ற துறைகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். நீதிபதி நியமனம் குறித்து அவர் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது அவமதிக்கும் நோக்கத்துடன் பேசப்படவில்லை" என்று வாதாடினார்.

இதனை கேட்ட நீதிபதி சதீஷ் குமார் அவர்கள், "இது அவமானப்படுத்துவதாக இல்லையா? உங்கள் வாதம் சரிதானா? திராவிட இயக்கம் இல்லாவிட்டால் அவர்கள் (தலித்) சுயமாக மேல் வந்து இருக்கவே முடியாது என்று சொல்ல வருகிறீர்களா? திமுகவால் தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா? 

மக்களின் பிரதிநிதி., ஒரு சட்டத்தை ஏற்றக்கூடிய இருக்கும் இடத்தில் இருப்பவர்., ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பில் இருந்து வருகிறவர்., இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், "பட்டியல், பழங்குடி மக்களுக்கும் யாருமே திறமை இல்லை என்பது போன்று ஆர்எஸ் பாரதி பேசியுள்ளார். பட்டியல் இனத்தவர்கள் முன்னேற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணமே திமுக போட்ட பிச்சை தான் என்று ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். ஆர் எஸ் பாரதி யின் பேச்சு ஒட்டுமொத்தமாக அந்த சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவரின் பேச்சுக்கு பல சமுதாய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெறுப்பையும், பகை உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள அந்தப் பேச்சின் காணொளி ஆதாரங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மனுதாரர் இந்த வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும். தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்யுமாறு ஆர் எஸ் பாரதி கோர முடியாது" என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ் குமார் அவர்கள், வழக்கின் தீர்ப்பு தேதியை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharathi PCR case issue in chennai hc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->