இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு.!! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ. 15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பிலான 137 வகையான உயிர் காக்கும் அத்தியவசிய மருந்து பொருட்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஏற்பாட்டில் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக டான் பின்-99 என்ற கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கப்பலில் கடந்த இரண்டு நாட்களாக மருந்து பொருட்கள், பால் பவுடர்கள், அரிசிகள் கிரைன் உதவியுடன் கப்பலில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

மருந்து பொருட்களை பொறுத்தவரையில் முதற்கட்டமாக ரூ. 8 கோடி மதிப்பில் 55 வகையான அத்தியவசிய மருந்துகளும், இரண்டு சிறப்பு மருந்துகளும் 700 அட்டைப் பெட்டிகள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல 15 கிலோ எடை கொண்ட பால் பவுடர் சுமார் 200 டன் வரை ஏற்றப்பட்டுள்ளது. மேலும், 50 கிலோ எடை 5 ஆயிரம் டன் அரிசி வகைகள் ஏற்றப்பட்டுள்ளது.

கப்பலில் நிவாரண பொருட்களை ஏற்றும் பணி இன்று பகல் நிறைவடைந்ததும், மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் புறப்படுகிறது. இதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relief items on behalf of the govt of tamilnadu to sri lanka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->