நபிகளின் போதனையை இஸ்லாமியர்கள் கடைபிடிப்பது அயோத்தி தீர்ப்பு உதாரணம்.! டாக்டர் ராமதாஸ் மிலாதுன் நபி வாழ்த்து.!
ramadoss wishes milad nabi to muslims
இஸ்லாமிய தீர்க்கதரிசி நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டினார்.
அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பில் கூட ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சகோதரத்துவத்தையும், அமைதியையும் நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக அத்தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறியிருப்பதே இதற்கு சிறந்த உதாரணமாகும்.
தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். நபிகள் நாயகம் கற்பித்த இந்த போதனைகளையும் நம் வாழ்வில் கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்
English Summary
ramadoss wishes milad nabi to muslims