இப்படி செய்தால் பாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறிடும்., எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநித்தின் சூரத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பாகிஸ்தானியர்கள் யாரும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் செல்ல வேண்டாம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தன் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

ஏனெனில், தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்தால் இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை திரும்பி வர அனுமதிக்க மாட்டார்கள் என இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு சிறுபான்மையினரின் மக்கள்தொகை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்தியயாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தார்கள், பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர், இனியும் பாதுகாப்பாக இருப்பார்கள். 

இந்தியா மக்களை ஜாதி, மத அடிப்படையில் யாரும் பிரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களுக்கு எதிராக உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிப்பது தொடர்ந்தால் பாகிஸ்தானை பிளவுபடுத்த யாரும் தேவையில்லை, அது தானாகவே துண்டு துண்டுகளாக சிதறிவிடும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh says about pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->