தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில், ரஜினிக்கு தொடர்பா.? ஆணைய அதிகாரியின் அதிரடி தகவல்.!
rajini may linked with thuthukudi gun shoot
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பொழுது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டது. இதில் 13 பேர் துப்பாக்கிசூடின் காரணமாக உயிரிழந்தனர்.
அப்போது அடிபட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி இங்கே சமூகவிரோதிகள் ஊடுருவல் இருக்கிறது. எனக்கு தெரியும் என கூறி இருந்தார். இதுகுறித்து, விசாரித்து வரும் ஒருநபர் ஆணையம், தற்போது 14வது கட்ட விசாரணையை முடித்து இருக்கின்றது.
379 பேரிடம் இதுவரை நடத்திய விசாரணையில், 555 ஆவணங்களை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, விசாரணை ஆணையம், அமைப்புகள் மற்றும் ரிட் மனு தாக்கல் செய்தவர்களிடம் விசாரிக்க இருக்கின்றது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர், "துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர் ஆறுதல் சொல்ல சென்ற நடிகர் சமூகவிரோதிகள் ஊடுருவிருப்பது தனக்கு தெரியும் என கூறியிருந்தார். தேவைப்பட்டால் அவரிடமும் இதற்கான விசாரணை நடத்தப்படும்" என அவர் கூறியுள்ளார்.
English Summary
rajini may linked with thuthukudi gun shoot