சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் ரஜினி!! பறந்து வந்த அறிக்கை!! தயாரான ரசிகர்கள்!!
rajini may come in politics
தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்.
அதே வேளையில் 19 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும். இந்த சூழ்நிலையில் அரசியல் விமர்சகர்களின் கணிப்பின்படி தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் ரஜினி ரசிகர் மன்றம் இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதனால் தேர்தல் முடிவு வெளியானதும், ரஜினியின் அரசியல் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
rajini may come in politics