மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை.. ரஜினி வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு.!!
rajin press meet on feb 23
பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்து வந்த ரஜினிகாந்த், சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ரஜினியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடலாம் என நினைத்து கொண்டு இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த போதிலும் சிலர் அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். உடல்நிலை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி பாச மழை பொழிந்தனர். மேலும் தங்களுக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பார் என பல கட்சிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் ரஜினி யாருக்கும் வாய்ஸ் தர மாட்டார் என ரஜினி தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால், ரஜினியை நம்பிக்கொண்டிருந்த கட்சிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வருகிற 26-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதனால் அரசியல் களத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிர்வாகிகளையும், செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார். இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
English Summary
rajin press meet on feb 23