எடப்பாடிக்கு எதிராக திரும்பிய அமைச்சர்... விரைவில் நான் யாருன்னு காட்றேன்.. அதிமுகவில் திடீர் சலசலப்பு.!!
rajenthra balaji angry due tn cm
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் சலசலப்பு நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஆவின் நிர்வாகம் நாள்தோறும் கொள்முதல் செய்யும் பாலில், 7 ஆயிரம் லிட்டர் வரை உபரியாக மிஞ்சுவதாக கூறப்படுகிறது.
7 ஆயிரம் லிட்டர் உபரிப் பாலை பால் பவுடராக மாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர். பவுடருக்கு மார்க்கெட் இல்லை என்று சில அதிகாரிகள் கூறியதாகா தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உபரிப் பாலை வெளியே விற்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.
இந்த உபரி பாலை நான் சொல்லும் நபர்களிடம் டெண்டர் விடுங்கள் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம், முதலமைச்சர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போயிருப்பதாக கூறுகின்றனர்.
இதைக்கேட்டு கோபமடைந்த முதலமைச்சர், இ-டெண்டர் விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டதாக கூறுகின்றனர். இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக ருத்திர தாண்டவம் ஆடியதோடு, நான் யாருன்னு கூடிய விரைவில் காட்டறேன்னு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
rajenthra balaji angry due tn cm