திமுகவில் இணையும் டிடிவி தினகரன்.?! வெளியான அறிவிப்பு., குழப்பத்தில் தொண்டர்கள்.!
rajendhirabalaji pressmeet virudhunagar
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக முதல்வருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் இன்று தன்னுடைய சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வருகை புரிந்தார். அப்போது, அதிமுக சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பால்வளத்துறை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனை மென்மேலும் வளர்த்தெடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.
சேலத்தில் மிகப்பெரிய பால் பண்ணை அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது. கால்நடை ஆராய்ச்சி மையம், பால்பண்ணை, இனவிருத்தி மையம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட இருக்கின்றது."என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அமமுக பொதுச் செயலாளர் தினகரனுக்கு இனி அரசியல் வாழ்க்கையே கிடையாது. அவரது கூடாரமே விரைவில் காலியாக போகின்றது. அவர் அமமுகவை கலைத்துவிட்டு கூண்டோடு திமுகவில் விரைவில் இணைவார்." என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமமுக பலமிழந்து வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சு சற்றே தினகரன் தொண்டர்களை கலக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
English Summary
rajendhirabalaji pressmeet virudhunagar