பீதியை கிளப்பும் முக்கிய விவகாரம்.! அமித் ஷா பதவி விலக வேண்டும்.! பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரின் செல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

வெளியான அந்த ஊடக செய்தியில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் உருவாகியுள்ள உளவு மென்பொருள் 'பெகாசஸ்' மூலம், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில், இது சர்வதேச சதி, யாருடைய செல்போனும் ஒட்டு கேட்படவில்லை என்று ஆணித்தரமாக தெரிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உளவு மென்பொருள் 'பெகாசஸ்' விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் காந்தி தனது செல்போனும் ஒட்டு கேட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற வளாகத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "எனது செல்போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இதற்க்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul gandhi say amit sha resign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->