தேர்தலுக்கு பிந்தைய கருக்கணிப்பு பற்றி ராகுல் போட்ட ட்வீட்? உற்சாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்.!!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலின்  இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 300க்கும் மேற்பட்ட  இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகின 

கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு மத்தியில் சற்று கவலையையும் சலசலப்பையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், சில ஊடகங்களின் போலி கருத்துக் கணிப்புகளால் மனம் தளர்ந்து விடாதீர்கள் என காங்கிரஸ் கட்சியினரை ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அடுத்த 24 மணிநேரம் மிகவும் முக்கியத்துவமானது. நீங்கள் சுதாரிப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

வாய்மைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் பயப்பட தேவையில்லை. போலி கருத்துக் கணிப்பு பிரசாரங்களால் மனம் தளர்ந்து விடாதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள். உங்களது கடுமையான உழைப்பு நிச்சயம் வீணாகப்போய் விடாது. ஜெய் ஹிந்த்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நேற்று முன்தினம்  காங்கிரசாருக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வகையில் பிரியங்கா காந்தியும் இதேபோல்ஆடியோ வடிவில் செய்தி வெளியிட்டுருந்தார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul tweet about pre poll result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->