சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் நன்றாக புரிந்து செயல்பட்டுள்ளனர் - இரா.முத்தரசன் அதிரடி..!!
r mutharasan speech about vellore election dmk won
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில்., அக்கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெவித்துள்ளதாவது., வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
வேலூர் தொகுதியில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் களம் கண்ட, திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட்ட, வேலூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களும் வேலூரில் முகாமிட்டு தங்களின் சக்தி முழுவதையும் பயன்படுத்தினர்.
ஆனால் வேலூர் தொகுதி மக்கள் தெளிவான முறையில் தீர்ப்பளித்துள்ளனர். பாஜக - அதிமுக தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணிக்கு எதிராக வேலூர் தொகுதி மக்களின் தீர்ப்பு மூலம், சந்தர்ப்பவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.
தெளிவான முறையில் தீர்ப்பளித்த வேலூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் பணியாற்றிய செயல் வீரர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
r mutharasan speech about vellore election dmk won