#BigBreaking || பஞ்சாப் - பிரதமர் பாதுகாப்பு விவகாரத்தில் திடீர்திருப்பம்.! அதிரடி தடை., சற்றுமுன் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விசாரணையை யாரிடமும் விட்டுவிட முடியாது. இது எல்லை தாண்டிய பயங்கரவாத விவகாரம். தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த விசாரணைக்கு உதவலாம்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

மேலும், "பிரதமர் பாதுகாப்பு வாகனம் நின்று கொண்டிருந்த அந்த மேம்பாலத்தில், ஒரு குதிரைப் படை ஒன்று நின்று கொண்டிருந்தது. அங்கு ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மேம்பாலத்தின் பின்புறமும் கூடியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பற்றி கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது" என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிரதமரின் பயணம் குறித்த விபரங்கள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகள் தங்களது முழு பதிவையும் சீல் வைத்து பாதுகாத்து, தேவையான உதவிகளை வழங்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை செய்யும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான மத்திய அரசு, பஞ்சாப் மாநில அரசுகளின் விசாரணைக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

punjam pm modi security issue supreme court hearing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->