சசிகலாவை பிளாக்-மெயில் செய்யும் டிடிவி தினகரன்.. சசிகலா வெளியே வந்ததும் இதுதான் நடக்கும்.? - Seithipunal
Seithipunal


கோவை சவுரிபாளையம் பகுதியில் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியவை, தமிழக பட்ஜெட் சிறப்பானதாக உள்ளது. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. கட்சி என்ற பெயரில் டிடிவி தினகரன் செய்த காமெடிக்கு அளவே இல்லை. 

சின்னம் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார் தினகரன். ஆர் கே நகர் தொகுதியில் 200 ரூபாய் நோட்டு வழங்கியதற்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பெயரை சொல்லி ஓட்டு வாங்க முடியாது. சசிகலா சிறையில் இருந்து வந்தால் எந்த மாற்றமும் நடைபெறாது. 

டிடிவி தினகரன் சசிகலாவை பிளாக்மெயில் செய்து வருகிறார். சிறையில் சசிகலாவை யாரையும் சந்திக்க விடுவதில்லை. டிடிவி தினகரன் ஒரு பிராடு. சசிகலாவின் பணத்தைக் கொள்ளையடிக்க தற்போது நாடகமாடி வருகிறார்  டிடிவி தினகரன். சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா அரசியலுக்கு வரமாட்டார். நேராக வீட்டிற்கு சென்று விடுவார். 

தற்போது சசிகலாவின் குடும்பத்தில் ஒருவருக்கு கூட சசிகலாவை வெளியே கொண்டுவர எண்ணமில்லை. டிடிவி தினகரன் ஒரு பசுந்தோல் போற்றிய புலி. தமிழக அரசியலில் டிடிவிதினகரன் ஒரு கொரோனா வைரஸ், அவருடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்காது. தினகரன் 2000 கோடி வைத்திருக்கிறார். கஜா புயலின் போது தனது சொந்த மாவட்டமான தஞ்சை மக்களுக்கு குறைந்தது 500 வீடுகள் கட்டிக் கொடுத்து இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யாத கூட்டம் டிடிவி தினகரன் கூட்டம் என பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pugazhendi press meet about ttv dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->