மாவட்டத்தில் அதிரடி மாற்றம் கொண்டு வந்த திமுக: புதிய மாவட்ட செயலாளரை நியமனம் செய்தார் துரைமுருகன்!
pugazhendhi appointed has villupuram dmk district secretary post
திமுகவின் பொதுக்குழு கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் துரைமுருகன், டி .ஆர்.பாலு, பொன்முடி, ராசா ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக பொதுச்செயலாளராக துறைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்த்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆ ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமனம் செயப்பட்டார்கள். திமுகவின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு துணை பொது செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக ஐ.பெரியசாமி. சுப்புலட்சுமி ஜெகதீசன், செல்வராஜ் ஆகியோர் உள்ள நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எண்ணிக்கை ஐந்தில் இருந்து மூன்றாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதால் விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நா புகழேந்தி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
pugazhendhi appointed has villupuram dmk district secretary post