ஸ்டாலின் திட்டம் பலிக்கவில்லை.. காலியாகும் டிடிவி. தினகரன் கூடாரம்.!!
pugalenthi says dinakaran
சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.புகழேந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியவை, ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக இருக்குமோ? இந்த ஆட்சியை இருக்குமோ? என்று சிலர் நினைத்தார்கள்.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாரும் பொறுப்புக்கு வந்து இருந்தாலும், இந்த ஆட்சியை நீடித்து இருக்காது. எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமையால் மட்டுமே கட்சியும், ஆட்சியும் நிலைத்து நிற்கின்றது. 97 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என்று திட்டம் போட்டார்.
ஆனால் முதலமைச்சரின் சாமர்த்தியத்தால் அது நடக்கவில்லை. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் தற்போது டிடிவி தினகரன் கூடாரம் காலியாகி வருகிறது என கூறினார்.
English Summary
pugalenthi says dinakaran