இதான் விடியலா, இதற்குத்தான் உங்க ஆட்சியா? விசிக, திமுக ரவுடிகளை தொடர்ந்து., இன்று ஒரு உயிரே போய்விட்டது.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே ஆடுகளை திருடி சென்ற நபர்களை பிடிக்க முயன்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஆடுகளை திருடிச் சென்றவர்களை துரத்தி பிடித்தபோது, சிறப்பு காவல் ஆய்வாளரை திருட்டு கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஆடு திருடிய இரண்டு நபர்களை அவர் பிடித்து விசாரணை செய்துள்ளார்.

அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அவர்களை பூமிநாதன் மற்றும் சித்திரவேல் என்ற காவலரும் துரத்தி சென்று உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே அந்த இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்த சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அந்த திருடர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பூமிநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர்.

சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக விசிக வழக்கறிஞர் ஒருவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகுந்து காவலரை மிரட்டிய சம்பவம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து பெண் காவலர் மீது திமுக வழக்கறிஞர் பிரிவு ரவுடிகள் தாக்க முயற்சித்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் காவல்துறையிரனருக்கே பாதுகாப்பு இல்லை என்றால்., பொதுமக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

கஞ்சா கும்பல் : இதுவரை, இஸ்லாமிய கட்சி, கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட 3 பேரை கஞ்சா கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், நேற்று முன்தினம், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக பிரமுகர் ஜோதிமுருகன், போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும், கோவை, கரூர் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர். இதில் கரூர் மாணவி காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அசிங்கம் வேறு.

ரவுடி, திருடன், பாலியல் குற்றவாளி, கஞ்சா கும்பலுக்கே விடியல் பிறந்துள்ளதா? தமிழகத்தில் மக்கள் ஆட்சியா? இல்லை ரவுடிகளின் ஆட்சியா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

மக்களுக்கு விடியல் தருவதாக சொன்ன முதல்வர் ஸ்டாலின், ரவுடிகளுக்கு விடியல் கொடுத்துள்ளார் என்பதையே தொடரும் சம்பவங்கள் உணர்த்துவதாக மக்கள் சமூக வலைத்தளம் கருது தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUKOTTAI POLICE SI MURDER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->