புதிய டாஸ்மாக் கடை., நாளை பூட்டுப்போடும் போராட்டத்தை அறிவித்த அரசியல் கட்சி.!
pudukottai aalangudi tasmac shop issue
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பழைய நீதிமன்றம் அருகே ஒரு மதுபான கடை இயங்கி வருகிறது. இருப்பினும் மேலும் ஒரு மதுபான கடை திறக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய மதுபான கடை அருகே கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் ஏராளமான பொது மக்கள்கள் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி காவல் துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.மேலும், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தைநடத்தினர். இதில் அலுவலர்கள் புதிய மதுபான கடை உரிய பாதுகாப்போடு திறக்கப்பட்டு செயல்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, நாளை அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே மற்றும் பழைய நீதிமன்றம் அருகே இயங்கும் இரண்டு மதுபான கடைகளையும் மூடுவதற்கு போராட்டம் நடத்தப்படும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
English Summary
pudukottai aalangudi tasmac shop issue