தமிழிசை ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல்! கடுப்பான முதலமைச்சர்!!
puducherry cm press meet about tamilisai
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை,
தமிழகத்தை சேர்ந்த தமிழிசைக்கு ஆளுநர் பதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி, அவருக்கு வாழ்த்துக்கள். தமிழிசையை நேரடியாக ஆளுநராக நியமனம் செய்தது விதிமுறை மீறிய செயல் என்றும் சாடினார்.
சர்காரியா கமிஷனில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநராக நியமிக்க கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்தவர்களுக்கு ஆளுநர் பதவி அளித்திருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறினார்.
English Summary
puducherry cm press meet about tamilisai