3 ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு பொது தேர்வு இல்லை அமைச்சர் தகவல்.!
public exam for 5th and 6th
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இருப்பினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஐந்து மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
English Summary
public exam for 5th and 6th