முன்னாள் மாவட்ட செயலாளர் சரமாரியாக வெட்டிக் கொலை! கொலைக்கான காரணம் இதுதானாம்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் முதுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் இவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். 

மர்ம நபர்கள் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ராஜலிங்கத்தை அவ்வழியே வந்தவர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜலிங்கத்தின் உடலில் சரமாரியான வெட்டு காயம் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜலிங்கம் உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டதை அறிந்த புதிய தமிழகம் கட்சியினர் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக, முதுகுடி அருகே இருக்கும் சாலையில் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம்  தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தேசியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேலு என்பவர் உயிரிழந்ததற்கும் ராஜலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் முன்விரோதத்தால் ராஜலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ptk party ex district secretary murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->