இப்படி ஒரு கட்சினா அது திமுக தான்.! தடாலடியாக பிரேமலதா கூறிய வார்த்தைகள்.!
premalatha speech about dmk in avadi
தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா? என தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆவடியில் தேமுதிக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகரம் சார்பில் முப்பெரும் விழா ஏழை எளிய மக்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான். ஒரு பொது நிகழ்ச்சியிலோ அல்லது கோவில் நிகழ்ச்சியிலோ இது நடந்திருந்தால் அதை வைத்து அவர் நிச்சயம் அரசியல் செய்திருக்க மாட்டார்.
காரணம், இது எதார்த்தமாக நடந்த விஷயம் தான். இன்று தமிழகத்தில் பேனர் அற்ற நிகழ்ச்சி நடக்கின்றதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "தமிழில் பெயர் வைப்பது என்று கூறுவது, ஹிந்தி எதிர்ப்பு என கூறுவது, சொன்னதை செய்யாமல் வாபஸ் வாங்குவது இதெல்லாம் செய்யும் ஒரே கட்சி திமுக தான்" என ஆவேசமாக தெரிவித்தார்.
கவர்னரை சந்திக்க சென்ற போது வீரவசனம் பேசிவிட்டு பின்னர் மரண பயத்தோடு திரும்பியதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் பார்த்திருப்பார்கள்." என நக்கலாக தெரிவித்துள்ளார்.
English Summary
premalatha speech about dmk in avadi