எடப்பாடிக்கு ஆதரவாய் களமிறங்கிய பிரேமலதா.! எதிர்க்கட்சிகளுக்கு வைத்த குட்டு.!
premalatha says about edappadi palanisamy
மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில்,"தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
தலைவர் விஜயகாந்த் தமிழிசைக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழிசை சவுந்தரராஜன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய வாழக்கையை அரசியலுக்கு அர்ப்பணித்தவர்.
அவரின் உழைப்புக்கும், நம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த பரிசு தான் கவர்னர் பதவி. இதனை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது தேவைஇல்லாதது. எதிர்க்கட்சி என்பதால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. இருக்கின்றது.
முன்னாள் முதல்வர்களான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் வெளிநாடு சென்று இருக்கின்றனர். அதுபோலத்தான், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநாடு சென்று இருக்கின்றனர்.
தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வரத்தான் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அதை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது தவறு, முதல்வரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது." என அவர் பாராட்டியுள்ளார்.
English Summary
premalatha says about edappadi palanisamy