இழந்த சக்தியை மீட்டெடுக்க பிரேமலதா சென்ற முக்கிய இடம்.! புதிய முயற்சியில் தேமுதிக.!
premalatha in nellai vijayapathi temple
குறுகிய காலத்திலேயே மக்களிடம் அதிக அளவில் சென்றடைந்த ஒரு கட்சி என்றால் அது தேமுதிக தான். ஆரம்பித்த சில வருடங்களிலேயே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தனது நடிப்பின் மூலம் எளிதாக மக்களை சென்றடைந்த அவர், மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார்.
அதனைப் பயன்படுத்தி கட்சியை ஆரம்பித்து, அதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் அவர் தமிழகத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில காலங்களாக விஜயகாந்தின் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தாலும், அவர் பேசும் சிலர் நக்கல் நையாண்டி பேச்சுகளிலும் தேமுதிக தனது சமூக அந்தஸ்தை இழந்தது.
இந்நிலையில், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த விஜயகாந்த் பாராளுமன்றத் தேர்தலையொட்டி திரும்பிவந்தார். அதிமுகவுடன் கைகோர்த்த பின்னரும், ன்கு சீட்டுகள் ஒப்பந்தத்தில் போட்டியிட்ட தேமுதிக ,ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை. இந்த நிலையில், கட்சியை மீட்டெடுக்க பிரேமலதா பெரும் பாடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் சக்தியை மீட்டெடுக்க அவர் சென்ற இடம்தான் விசுவாமித்திர மகரிஷி கோவில். இன்று அதிகாலை 4 மணிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா நெல்லை மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்ற கிராமத்தில் விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார். இந்த கோவில் கூடங்குளம் அருகே அமைந்துள்ளது.
இந்த கோவிலில்தான் விசுவாமித்திர மகரிஷி அவர் இழந்த சக்தியை மீட்டெடுத்ததாக வரலாறு கூறப்படுகிறது.
English Summary
premalatha in nellai vijayapathi temple